Tuesday, September 20, 2011

எலியும் சிங்கமும்



ஒரு பெரிய குகையில ஒரே ஒரு எலி ஹாயா படுத்துகிட்டு இருந்துச்சி. அது ரொம்ப கோபக்கார எலி.என்னை மாதிரி. அங்க ஒரு சாதுவான சிங்கம் வந்து அதுகிட்ட கொஞ்சம் தள்ளி படுங்கன்னு சொன்னுச்சி. உடனே கோபம் பட்ட எலி அதனோட பிடரியை பிடிச்சி தூக்கி நாலு சாத்து சாத்திடுச்சி.உடனே சிங்கம் என்னை விட்டுறு எலி உனக்கு என்ன வேணாலும் பண்ணுறன்னு சொன்னிச்சாம்..சரி உன் போன் நெம்பர் கொடுத்துட்டு போ ன்னு எலி சொன்னிச்சாம்..


சில நாட்களுக்கு பிறகு, ஒரு நாள் வேடனுடைய வலையில எலி மாட்டிகிட்டாம்.அப்ப எலி தன் பேன்ட் பாக்கெட்டில் இருக்கற போன் எடுத்து சிங்கத்த கூப்பிட்டுச்சாம்..அங்க வந்த சிங்கத்தை பார்த்து எலி சீக்கிரம் உன் பல்லால இந்த வலையை கடிச்சி என்ன காப்பாத்துன்னு சொன்னிச்சாம். சிங்கம் தன் வாயா தொறந்த காட்டுச்சாம்.உள்ள பொக்க வாயா இருந்துசாம். உன் பல்லு எல்லாம் என்ன ஆச்சின்னு எலி கேட்டுச்சாம். அதுக்கு அந்த சிங்கம் அன்னைக்கு நீ அடிச்ச அடில என் பல் எல்லாம் கொட்டி போய்டுச்சின்னு சொன்னதாம்.

நீதி: யார வேணாலும் அடிங்க..ஆனால் வாயில மட்டும் அடிக்காதீங்க...

நன்றி:ரேடியோ மிர்சி.