Saturday, December 24, 2011

கிறிஸ்துமஸ் சிறப்பு கதை- பாலயேசுவின் அன்பு




யேசு தன் குழந்தைப் பருவத்தை நாசரேத்தில்தான் கழித்தார். பாலயேசு மற்றவர்களிடம் மிகவும் அன்புடன் பழகினாலும், அவனைக் கேலி செய்து அவமானப்படுத்துவதில் விருப்பம்கொண்ட சிலர் இருக்கத்தான் செய்தார்கள். சிலர் அவனைத் துன்புறுத்தினார்கள்.

ஒருநாள் பாலயேசு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது ரபேக்கா என்ற ஒரு பாட்டி, குப்பைகளைக் கூட்டி அள்ளி பாலயேசுவின் தலையில் கொட்டினார்கள். பாவம் பாலயேசு! அவன் மேலே பார்த்தான். அந்த ரபேக்கா பாட்டி, வீட்டின் மாடியிலிருந்து அவனைப் பார்த்து கேலியாகச் சிரித்தார்கள்.

பாலயேசு தலையைக் குனிந்துகொண்டான். வீட்டுக்குச் சென்று தன் அம்மா மரியாவிடம் அழுதபடியே சொன்னான்:

அம்மா இதைக் கேளம்மா
வெட்கக் கேடாய்ப் போனதம்மா!
குப்பை அள்ளி என்தலையில்
பாட்டி ரபேக்கா கொட்டினாரே!

தன் மகன் சொன்னதைக் கேட்டு மரியா துயருற்றார்கள். அவர்கள் பாலயேசுவின் கண்ணீரைத் துடைத்துவிட்டு ஆறுதல் சொன்னார்கள்:

அருமை மகனே அழாதே
மனதில் பகைமை கொள்ளாதே
பாட்டியைப் பார்த்தால் நீயும்தான்
ஆப்பிள் ஒன்றைக் கொடுத்திடுவாய்!

என்று சொன்ன மரியா ஒரு ஆப்பிளை எடுத்து பாலயேசுவிடம் கொடுத்தார்கள். மறுநாள் பாலயேசு, தன்னை அவமானப்படுத்திய ரபேக்கா பாட்டியை வழியிடையில் சந்தித்தான். அம்மா கொடுத்த ஆப்பிளை அந்தப் பாட்டியிடம் கொடுத்தான். தான் அவமானப்படுத்திய பையன், தன் மீது காட்டும் அன்பைக் கண்டு ரபேக்கா பாட்டி தலைகுனிந்தார்கள்.

மற்றொரு நாள் பாலயேசு, தனியே வழியில் நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது, ஜுனன் என்ற பெயருடைய ஒரு சிறுவன், பாலயேசுவின் மீது அழுக்குத் தண்ணீரை எடுத்து ஊற்றினான். பாவம் பாலயேசு. அவன் அழுக்குத் தண்ணீரைத் துடைத்துக் கொண்டான். வீட்டுக்குச் சென்று அழுதபடியே தன் அம்மாவிடம் சொன்னான்:

அம்மா இதைக் கேளம்மா
வெட்கக் கேடாய்ப் போனதம்மா!
ஜுனன் அண்ணன் என்மீது
அழுக்கு நீரைக் கொட்டினாரே!

பாலயேசு சொன்னதைக் கேட்டு அம்மா மரியாவின் மனம் துடித்தது. அவர்கள் குழந்தை யேசுவின் கண்ணீரைத் துடைத்தபடியே சொன்னார்கள்:

அருமை மகனே அழாதே
மனதில் பகைமை கொள்ளாதே
ஜுனன் அண்ணனைப் பார்த்தாலே
அத்திப் பழங்கள் கொடுத்திடுவாய்!

பிறகு மரியா கொஞ்சம் அத்திப் பழங்களை பாலயேசுவிடம் கொடுத்தார்கள். மறுநாள், தன்னைப் பார்த்து கேலியாகச் சிரிக்கிற ஜுனன் அண்ணனை, கடைவீதியில் பார்த்தான் பாலயேசு. தன் பையிலிருந்து அத்திப் பழங்களை எடுத்து ஜுனன் அண்ணனிடம் கொடுத்தான். ஜுனன் ஆசையுடன் அந்த அத்திப் பழங்களை வாங்கித் தின்றான்.

சில நாட்கள் கடந்தன. பாலயேசு தன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது, ஜோனாதன் எனும் பெயருடைய ஒருவன் பாலயேசுவைக் கல்லால் அடித்தான். பாலயேசுவின் நெற்றியில் அடிபட்டு ரத்தம் பெருகியது. அவன் பரிதாபமாக அழுதுகொண்டே தன் வீட்டுக்கு ஓடினான். அழுகையை அடக்க முடியாமல் தேம்பிக்கொண்டே அம்மாவிடம் சொன்னான்:

அம்மா இதைக் கேளம்மா
வெட்கக் கேடாய்ப் போனதம்மா
கல்லால் அடித்தார் ஜோனாதன்
நெற்றியில் ரத்தம் ஒழுகுதம்மா!

அதைக் கேட்ட மரியாவும் கதறி அழுதார்கள். தன் மகனின் காயத்தைத் துடைத்து மருந்து வைத்துக் கட்டுப்போட்டார்கள். அவனை உச்சி முகர்ந்து முத்தமிட்டுச் சொன்னார்கள்:

அருமை மகனே அழாதே
மனதில் பகைமை கொள்ளாதே!
ஜோனா தனைப் பார்த்தாலே
திராட்சைப் பழங்கள் கொடுத்திடுவாய்

பிறகு சில திராட்சைக் கொத்துகளை மகனிடம் கொடுத்தார்கள்.

மறுநாள், வழியோரத்தில் நின்று தன்னைப் பழிக்கிற ஜோனாதனிடம் பாலயேசு திராட்சைப் பழக்கொத்துகளைக் கொடுத்தான். ஜோனாதன் ஆவலுடன் அந்தத் திராட்சைப் பழங்களைத் தின்னத் தொடங்கினான்.

ரபேக்கா பாட்டியும், ஜுனனும், ஜோனாதனும் பாலயேசுவைத் துன்புறுத்தியதையும், பாலயேசு அவர்களுக்கெல்லாம் அன்புடன் பழங்கள் கொடுத்ததையும் ஒருவர் தொடர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருந்தார். அவர் பெயர் ஸீயோன். அவர் நல்லவர். அவர் ஒருநாள் பாலயேசுவிடம் கேட்டார்:

அவமதிக்கும் மனிதர்க் கெல்லாம்
அன்பளிக்கும் சிறுவனே
ஏன் இப்படிச் செய்கின்றாய்
என்பதை எனக்கும் சொல்வாயே!

அப்போது பாலயேசு சொன்னான்: என்னைத் துன்புறுத்துகின்றவர்களும், அவமதிக்கின்றவர்களும் அவர்களின் மனதில் உள்ள தீமையைத்தான் எனக்குத் தருகிறார்கள். ஆனால், நான் என் மனதில் உள்ள நன்மையை அவர்களுக்குக் கொடுக்கிறேன். ஒவ்வொருவரும் தன்னிடம் இருப்பதைத்தானே மற்றவர்களுக்குத் தர முடியும்?" பாலயேசு சொன்ன பதிலைக் கேட்டு, அவனை அள்ளி அணைத்துக் கொண்டார் ஸீயோன்.

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.....

(குறிப்பு: இக்கதை 'அன்பின் வெற்றி' என்ற நூலிருந்து எடுக்கப்பட்டது.)

Friday, December 9, 2011

நான் செய்த தவறு



சில தவறுகள் 
நம்மை பக்குவப்படுத்தும்
மீண்டும் அத்தவறை 
செய்யாமல் இருக்க 
எச்சரிக்கை செய்யும்..
ஆனால் 
எச்சரிக்கையாக 
இருந்தும் நான் 
செய்த தவறு
அவளின் மீது 
நான் கொண்ட காதல் தான்........




Wednesday, November 23, 2011

அவளின் வாசனை





அலுவலகம முடித்து 
வீடு திரும்பும்
பேருந்து பயணங்களில் 
அவளையும் பார்க்கலாம்...
டியோடரண்ட் துணையுடன்
உயிர் வாழும்
உயினங்களில்
அவளும் ஒருத்தி...
அவள் இறங்கும் இடத்திற்கு
முன்புள்ள பேருந்து நிறுத்தஙங்களில்
இறங்கி போகும் 
பெரும்பான்மையான ஆண்களிடம்
கொஞ்சம் கொஞ்சம் தென்படும
அவளின் வாசனை......



Monday, November 21, 2011

நீண்ட நாள் ஆசை...



கவிதை எழுத வேண்டும்
என்று
நீண்ட நாள் 
ஆசை....
இயற்கை அழகை
பார்த்து
ரசித்து
எழுத நினைத்த நான்
சில காகிதங்களையும்
பேனாவையும்
எடுத்து கொண்டு 
பூங்கா சென்றேன்....
ஆனால் 
அங்கோ
பசுமையான செடிகளுக்கு
பதில்
நாள்களை எண்ணி 
கொண்டுயிருக்கும்
பழுப்பு செடிகளும்
நாளை வியாதியினை 
எளிமையாக
வரவைக்கும்
கொசுக்களும்
நள்ளிரவு
குடிமகன்கள்
விட்டு சென்ற 
மதுபாட்டில்களுமே 
இருந்தன...
கவிதை
ஆசை இன்னும் 
தீரவில்லை...

Monday, November 14, 2011

காகங்களின் ஆசை




ஒரு காட்டின் ஆற்றங்கரையின் அருகே அடர்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. ஆலமரத்தில் ஏராளமான காகங்கள் கூடு கட்டி வசித்து வந்தன. ஒருநாள் அந்த மரத்தின் பக்கமாக மயில் ஒன்று பறந்து வந்தது. அந்த மயில் ஆலமரக் கிளையில் அமர்ந்ததும், காகங்கள் எல்லாம் மயிலை அதிசயமாகப் பார்த்தன. மயில் தோகையுடன் அழகாக இருக்கவே, தங்களுக்கும் தோகை எதுவும் இல்லையே என்று காகங்கள் வருத்தமடைந்தன. உடனே அந்த மயிலைச் சூழ்ந்து கொண்டன. மயிலே உன்னிடம் அழகான தோகை இருக்கிறதே! உன்னைப் போன்று எங்களுக்கு தோகை வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எங்களுக்கும் தோகை கிடைக்க வேண்டுமென்றால் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று காகங்கள் கேட்டன. மயிலோ அந்தக் காகங்களை எல்லாம் முட்டாள்களாக்க வேண்டும் என்று மனதுள் நினைத்தது

காகங்களே நீங்கள் என்னிடம் விரும்பிக் கேட்கிற காரணத்தால், நான் இந்தக் கதையினை உங்களிடம் தெரியப்படுத்துகிறேன். காகங்களே! நான் மலை உச்சியில் உள்ள வேப்பமரத்தில் வசித்து வந்தேன். அப்போது எனக்கு இந்த தோகையில்லை. அப்போது மலையிடுக்கில் என்னைப் போன்ற மயில் ஒன்று வசித்து வந்தது. ஆனால், அதற்கு தோகையிருந்தது. நான் உடனே அந்த மயிலிடம் சென்று, நண்பனே! உனக்கு மட்டும் அழகிய தோகையிருக்கிறதே, எனக்கு அந்தத் தோகையில்லையே. அது எதனால்? என்று கேட்டேன். உடனே அந்த மயில் நீ எனக்கு மூன்று வேளையும் நேரம் தவறாமல் இரையினைச் சேகரித்துக் கொண்டு வந்தால் உனக்கு தோகை வளர்ந்து விடும் என்றது. உடனே நானும் தினமும் என் பசியை மறந்து அந்த மயிலுக்கு மூன்று வேளையும் இரை தேடிக் கொடுத்தேன். இப்படியே ஒரு மாதம் முடிவடைந்தன. அதன் பிறகு ஒருநாள் இரவு நேரம் நான் நல்ல தூக்கத்தில் இருந்தேன். அதிகாலை நேரத்தில் நான் கண்விழித்துப் பார்த்த போது எனக்குப் பெரிய தோகை வளர்ந்திருப்பதைக் கண்டேன். உடனே மகிழ்ச்சியில் ஆடிப், பாடினேன் என்றது மயில். உடனே ஒரு காகம், மயிலே! நாங்களும் உனக்கு மூன்று வேளையும் இரை தேடித் தந்தால், ஒரு மாதத்திற்குப் பின்னர் எங்களுக்கும் தோகை வளர்ந்து விடுமல்லவா? என்று கேட்டது. அதிலென்ன சந்தேகம், உடனேயே தோகை வளர்ந்து விடும்! என்றது மயில். அதனைக் கேட்ட காகங்கள் எல்லாம் மகிழ்ச்சியடைந்தன. மயிலின் பேச்சைக் கேட்ட காகங்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு இரை தேடச் சென்றன. இப்படியே தொடர்ந்து ஒரு மாத காலமாக காகங்கள் எல்லாம் தங்களின் பசியையே மறந்து, மயிலுக்கு மூன்று வேளையும் உணவுத் தேடிக் கொடுப்பதிலேயே மிகவும் கவனமாக இருந்தன. இதன் காரணமாக சில காகங்கள் சோர்வடைந்தன. இன்னும் சில காகங்கள் மயங்கி விழுந்தன.

ஆனால் மயிலோ அதனைப் பற்றிக் கவலைப்படவில்லை. நாம் இந்தக் காகங்களை ஏமாற்றி ஒரு மாத காலம் உட்கார்ந்த இடத்திலேயே அமர்ந்தபடி மூன்று வேளையும் உணவைத் தேடிக் கொண்டோம். இந்த முட்டாள் காகங்கள் நம் பேச்சை நம்பி ஏமாந்துவிட்டன! என்று மனதுக்குள் நினைத்தபடி மகிழ்ச்சியுடன் இருந்தது. அப்போது அந்தப் பக்கமாக வேடன் ஒருவன் வந்தான். அவன் மரத்தில் நின்று கொண்டிருக்கும் மயிலைப் பார்த்தான். நெடு நாட்களாகவே மயில் தோகை கிடைக்க வேண்டி முயற்சித்து வந்தான் அந்த வேடன். இப்போது தோகைகளுடன் கூடிய மயிலைப் பார்த்ததும் அதன் மீது அம்பினை எய்தான். அம்பு பட்ட மயிலும் பொத்தென்று தரையில் விழுந்தது. தரையில் விழுந்த மயிலை வேடன் தூக்கிச் சென்றான். உடனே மயில், காகங்களுக்கு நாம் செய்த துரோகத்திற்குத் தான், கடவுளால் நமக்கு இப்படி ஒரு தண்டனை கிடைத்திருக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டது.

நீதி: ஏமாற்ற நினைப்பவர்களுக்கு தண்டனை நிச்சயம்

குறிப்பு: இது குழந்தைகள் எழுதிய காம்போய் கதைகள் என்ற நூல் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

Thursday, November 10, 2011

இதயம் இல்லை.....


படிச்சி முடிச்சிட்டு திட்டமா இருந்த சரி......

புத்தகம்
மேசை
கணிப்பொறி
சுட்டி
விசைப்பலகை
குறுந்தகடு
கோப்பையில்
உள்ள
தண்ணீர்
இருக்கை
இவை
அனைத்தும் 
இருந்தது 
நான் இருந்த 
அறையில்....

ஏதோ பக்கத்துல இருக்குற பேரை எல்லாம் ஒன்னுக்கு கீழ ஒன்னு எழுதி வைச்சிட்டேன்.........எப்புடி.........


இதயம் இல்லை.......

உன் நினைவுகளை
என்
இதயத்தில்
பத்திரப்படுத்தி 
வைக்க வேண்டிய 
ஆவல் எனக்குதான்...
இருந்தும்
முடியவில்லை...
என் இதயம் 
உன்னிடம் 
இருப்பதினால்.....




பூக்கள்.

நீ 
சொல்லும் 
ஒவ்வொரு வார்த்தைகளும் 
பூக்களாக உதிர்கின்றது.....
பூக்களுக்கு போட்டி 
யார் உன் 
பாதைத்தை 
தொடுவது என்று.....