Wednesday, February 9, 2011

தனிமை

தாயின் முகம்
பார்க்காததால் என்னவோ 
கருவறையிலே 
இருப்பது  போன்ற 
உணர்வு..
எப்போதும்...
தனிமை....


பலருக்கு தனிமை
கொடுமை...
எனக்கோ
இனிமை.... 


முன்பெல்லாம் எப்போதாவது கிடைக்கும்
தனிமைக்கு வருத்தப்படுவதுண்டு…
இப்போது தனிமை பழகிவிட்டதால்
எப்போதும் இனிமையாகவே இருக்கிறது…


எப்போதும்
என்மீது காதல் கொண்டு இணைகிறது!
இறக்கும் வரை எனக்குத் துணையாய் என் துணைவியாய்
எப்போதும்
என்னுடன்
என் தனிமை!














1 comment:

Ram said...

சுமாரா இருக்கு..