Tuesday, May 15, 2012

கணக்கு புலி "காரல் பெடரிக் காஸ்"

  ஜெர்மன் நாட்டு கணிதவியல் அறிஞர் காரல் பெடரிக் காஸ். இவர் இயற்பியலும் வானவியலிலும் ஈடுபாடு கொண்டவர்.

  கணிதத்தில் திறன் உள்ளவர்களை வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் ‘இவன் கணக்கில் புலி’ என்பார்கள். அதே போன்ற சம்பவம்தான் இவரு மைய வாழ்க்கையிலும் நடந்தது. 

  இவர் ஏழு வயது சிறுவனாக பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். அப்போது, அவனது கணித ஆசிரியர், “மாணவர்களிடம் 1 முதல் 100 வரையிலான எண்களைக் கூட்டிச் சொல்லுங்கள்” என்று கேட்டார்.
அதற்கு மிகச் சரியாக சில நிமிடங்களில் 5050 என்று விடையை சொன்னார் காஸ்.

ஆச்சரியப்பட்ட ஆசிரியர், “எப்படி இவ்வளவு விரைவாக கண்டறிந்தாய்?” எனக் கேட்டார்.

“1+2+3+……. என்று தொடர்ந்து கூட்டவது எனக்கு சோம்பலாக இருந்தது. இந்த எண் தொடரை உற்று கவனித்தேன். முதல் மற்றும் இறுதி எண்களை மட்டும் கூட்டிப் பார்த்தேன். 101 ஆக வந்தது. அவர்ற்றை நீக்கிய பின், மீதமுள்ள முதல் மற்றும் இறுதி எண்களை கூட்டிப் பார்த்தேன். அப்போதும் விடை 101 என வந்தது.அப்படியோ  பார்க்கும் போது
1+100=101
2+99=101
3+98=101 என்ற தொடர் எனக்கு பிடிப்பட்டது. இந்த ஜோடிகளின் கடைசி ஜோடி எது என்று பார்த்தேன். 50+51=101. எனவே இதில் 50 மடங்கு 101 அல்லது 101 மடங்கு 50 என்றும் முடிவுக்கு வந்தது. இந்தப் தொடரின் கூட்டுத் தொகையை 50 X 101 = 5050 என்று கண்டுபிடித்தேன்” என்றார்.

நன்றி: வண்ணக்கதிர்

No comments: