Monday, November 21, 2011

நீண்ட நாள் ஆசை...



கவிதை எழுத வேண்டும்
என்று
நீண்ட நாள் 
ஆசை....
இயற்கை அழகை
பார்த்து
ரசித்து
எழுத நினைத்த நான்
சில காகிதங்களையும்
பேனாவையும்
எடுத்து கொண்டு 
பூங்கா சென்றேன்....
ஆனால் 
அங்கோ
பசுமையான செடிகளுக்கு
பதில்
நாள்களை எண்ணி 
கொண்டுயிருக்கும்
பழுப்பு செடிகளும்
நாளை வியாதியினை 
எளிமையாக
வரவைக்கும்
கொசுக்களும்
நள்ளிரவு
குடிமகன்கள்
விட்டு சென்ற 
மதுபாட்டில்களுமே 
இருந்தன...
கவிதை
ஆசை இன்னும் 
தீரவில்லை...

No comments: